Wednesday, January 28, 2015

இந்திய விவசாயமும். கார்பரேட் கறை படிந்த ஆராய்ச்சிகளும்.

     நேற்றுத் தான் 25.01.2015 அன்று ஒளிப்பரப்பட்ட "நீயா நானா" நிகழ்ச்சியை பார்க்க முடிந்தது. அதில் அறிவியல் பக்கம் பேசியவர்கள், அறிவியல் ஆராய்ச்சி முடிவுகள் இதை சொல்கின்றன, அதை சொல்கின்றன என்று பேசினார்கள். ஏன் கார்பரேட் கம்பனிகளுக்கு எதிராக எந்த ஒரு ஆராய்ச்சி முடிவுகளும் இல்லை என்பது அவர்கள் வாதம். கார்பரேட் கம்பனிகளின் பொருட்களை நீங்கள் ஆராய்ச்சி செய்யவே முடியாது. அவ்வாறு ஆராய்ச்சி செய்வதை எந்த ஒரு அறிவியல் அமைப்பும் ஏற்றுக் கொள்ளாது. ஏனெனில் அந்த அறிவியல் அமைப்புகளுக்கு பணம் தருவதே இந்த கார்பரேட் கம்பனிகள் தான். எனக்கு தெரிந்த சில விஷயங்கள்.

     1991-92 ஆம் ஆண்டு. என் மனைவி ஒரு கல்லூரியில், B.Sc. (Chemistry) படித்துக் கொண்டிருந்த நேரம். அது ஒரு தனியார் பெண்கள் கல்லூரி.அவரின் பேராசிரியர் ஒரு ஆராய்ச்சி செய்துக் கொண்டிருந்தார். "Adulteration in Chicken" என்பது அந்த ஆராய்ச்சியின் தலைப்பு. என் மனைவியும், அதற்க்கு மாணவர் உதவியாளராக இருந்தார். ஆம்பூர், வாணியம்பாடி போன்ற ஊர்களில் இருக்கும், தோல் பதனிடும் தொழிற்சாலைகளில் இருந்து கொட்டப்படும், தோல் கழிவுகள் தான் நாம் உண்ணும் ப்ராய்லர் கோழிகளுக்கு உணவாக எடுத்துச் செல்லப்படுகின்றன. இந்த கழிவுகள் அனைத்தும் தோல் பதப்படுத்தப்பட்ட பின் மீதமான கழிவுகள். தோல் பதப்படுத்தபடுவதற்க்கு என்னென்ன ரசாயனங்களை நாம் உபயோகப்படுத்துகிறோம் என்று தெரியும். அவை நீரில் கலந்தாலே நிலம் எவ்வளவு மாசடைகிறது என்றும் நமக்கும், அரசுக்கும் தெரியும். ஆனால், இந்த கழிவுகளை உண்ணும் கோழிகளை நாம் சாப்பிடும்போது என்னென்ன ரசாயனகள் நம் உடலுக்குள் செல்கின்றன என்பது நாம் அறியாதது. அந்த ஆராய்ச்சியின் முடிவுகள் பயங்கரமாக இருந்தன. ஆனால், தோல் பதமிடுபவரகளும், கோழி கார்பரேட்களும் சேர்ந்து அந்த ஆராய்ச்சியின் முடிவுகளை வெளியே வர விடாமல் செய்து விட்டனர். கடுமையான மிரட்டல்களுக்கு பயந்து, அவர்கள் பெண்கள் என்பதால், அந்த ஆராய்ச்சியை வெளியிடாமல் மூடி வைத்து விட்டனர்.

     அடுத்து அவர்கள் கையில் எடுத்தது, "Adulteration in Milk". இதை எடுக்கும்போது அப்படியெல்லாம் ஒன்னும் பெரிய முடிவுகள் வராது என்றும் இது மிகவும் பாதுகாப்பான ஒரு ஆராய்ச்சி என்றும் நினைத்து தான் எடுத்தார்கள். ஆனால் இதன் முடிவுகள் முன்பை விட பயங்கரமாக இருந்தன. நாம் அருந்தும் பால் பாலே அல்ல என்பதும் அது வெறும் ரசாயன கலவை என்பதும் தெரிய வந்தது. இதை மோப்பம் பிடித்த பால் கார்பரேட்கள், மறுபடியும் மிரட்டத் தொடங்கினார்கள். இதில் கொடுமை என்னவென்றால், அரசு நிறுவனமான ஆவின் பாலிலும் ரசாயன கலவைகள் இருந்தது. இதை அறிந்ததும் தனியார் கார்பரேட்கள் அரசு அதிகாரிகளுடன் கைக்கோர்க்க ஆரம்பித்தார்கள். அரசு தரப்பில் இருந்து அரசு அதிகாரிகளால் மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்த முறை பின் வாங்காமல் எப்படியும் வெளியிட்டு விடுவது என்று அவர்கள் முடிவெடுத்த போது, வேறு வழியில் அரசு மிரட்ட ஆரம்பித்தது. இந்த ஆராய்ச்சி முடிவுகள் வெளிவந்தால் அது ஆவினுக்கு கெட்ட பெயரை உண்டாக்கும். அது மறைமுகமாக அரசையும் பாதிக்கும் எனவே இந்த ஆராய்ச்சியை நிறுத்துங்கள் என்று அரசு அதிகாரிகள் மிரட்டினர். அந்த கல்லூரி தாளாளரை கூப்பிட்டு, இந்த ஆராய்ச்சி முடிவுகள் வெளி வந்தால், நீங்கள் நடத்தும் அனைத்து கல்வி நிறுவனங்களையும் அரசே ஏற்று நடத்த வேண்டி வரும் என்று மிரட்டியது. வேறு வழியின்றி, அந்த ஆராய்ச்சியும் முடக்கப்பட்டது.

     இப்படி மாநில அளவிலான கம்பனிகளே, ஆராய்ச்சியை முடக்க முடியும் எனும் போது, உலகளவில் இருக்கும் கார்பரேட்களின் பலம் என்ன என்பது சொல்லத் தேவை இல்லை. ஒவ்வொரு கார்பரேட்டும், அவர்கள் சார்ந்த தொழிலில் உள்ள ஆராய்ச்சி கூடத்தை தத்து எடுத்துக் கொள்கிறார்கள். எனவே அவர்களுக்கு சாதகமாகத்தான் ஆராய்ச்சி முடிவுகள் வரும். அரசு ஒரு நடுநிலைமையான ஆராய்ச்சி அமைப்பை உருவாக்க வேண்டும் என்றாலும் அதிலும், அரசியல், அரசு போன்ற குறிக்கீடுகள் இல்லாத ஒரு ஆராய்ச்சி நடக்கும் என்பது சந்தேகமே.

     கடைசியாக, அறிவியல் முடிவுகள் என்பது ஒன்றும் சத்தியமான உண்மை கிடையாது, அதுவும் ஒரு மூட நம்பிக்கை தான், அது தவறு என்று வேறொருவர் நிருபிக்கும்வரை. ஆனால் எனக்கு தெரிந்தவரையில், இப்போதெல்லாம் அறிவியல் மதத்தை சேர்ந்தவர்கள் தான், அதிக மதவெறி பிடித்து, மூட நம்பிக்கையில் அலைகிறார்கள்.

No comments:

Post a Comment