ரிக் வேதம்
வேதங்களில் முதன்மையானது வேதம் ரிக் வேதம். ரிக் வேதத்தில் எங்கேயுமே பிள்ளையார் பற்றி இல்லை. இருந்தாலும் ஒரு சிலர், அதில் வரும் ஒரு சுலோகத்தை கணபதியை குறிப்பதாக சொல்லுவார்கள். அது ரிக் வேதம் இரண்டாம் தொகுதியில் 23ஆம் சுலோகமாக வருகிறது. விநாயகர் முழு முதற் கடவுளாக இருக்கும் பட்சத்தில் அவரைப்பற்றி ஏன் 214வது சுலோகத்தில் சொல்ல வேண்டும். அதுவுமில்லாது, ரிக் வேதத்தில் இந்த ஒரு இடத்தில் மட்டுமே பிள்ளையார் வருவதாக கூறுகிறார்கள். அதிலும் இதில் முதல் வரியில் மட்டும்.
இதில் நாம் முக்கியமாக பார்க்க வேண்டியது, இந்த 214 மட்டுமின்றி அடுத்து வரும் 215, 216 மற்றும் 217 ஆகியவை தேவ கணங்களின் தலைவரான் ப்ரஹஸ்பதியை குறிக்கிறது. இது விநாயகரைத் தான் குறிக்கிறது என்று சொல்லுபவர்கள் சுட்டிக்காட்டும் காரணம் அதில் வரும் ஒரு வார்த்தை, "கணபதிம்". இதற்கு என்ன அர்த்தம் கணம்களின் அதிபதி என்று அர்த்தம். கணங்களின் அதிபதி ப்ரஹஸ்பதி என்று முன்னமே வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிலும் குறிப்பாக பிள்ளையாரின் யானை தலையை பற்றியோ, தொந்தியை பற்றியோ இதில் எந்த குறிப்பும் இல்லை. மேலும், ப்ரஹஸ்பதி கணங்களின் தலைவர், போரில் நல்லவர்களை பாதுகாப்பவர், உடலை, விளைச்சலை பாதுகாப்பவர். செல்வங்களை அளிப்பவர். இவர் இடத்தை தான் பின்னாளில் விநாயகர் பிடித்துக் கொண்டார். இவருக்கும் விநாயகருக்கும் என்ன வித்தியாசம். இவர் முனிவர், மனிதனை போல் உடல் கொண்டவர். இவருக்கு தொந்தியோ, தும்பிக்கையோ கிடையாது.
ப்ரஹஸ்பதியை பாடும் அந்த சுலோகம்
ghaṇānāṃ tvā ghaṇapatiṃ havāmahe kaviṃ kavīnāmupamaśravastamam |
jyeṣṭharājaṃ brahmaṇāṃ brahmaṇas pata ā naḥ ṣṛṇvannūtibhiḥ sīda sādanam ||
ghaṇānāṃ - கணனம் - கணங்களின்
tvā - தாங்கள்
ghaṇapatiṃ - கணங்களின் தலைவர்.
havāmahe - உங்களை வேண்டுகிறோம்
kaviṃ kavīnām - மெய்யறிவின் மெய்யறிவே
upamaśravastamam - அனைவரை விட புகழுடையவரே.
jyeṣṭharājaṃ brahmaṇāṃ - வேண்டுதலின் முதல் அரசரே
brahmaṇas pata ā naḥ - ஓ! ப்ரஹஸ்பதி
ṣṛṇvannūtibhiḥ - எங்கள் வேண்டுதலை கேளுங்கள்.
sīda sādanam - எங்கள் வேள்வியை ஏற்றுக்கொண்டு வந்து அமருங்கள்.
இதில் எங்கு விநாயகர் வருகிறார்.
இந்திரன், வருணன், அக்னி, ருத்ரன், மித்திரன், வாயு, சூர்யன், விஷ்ணு, சாவித்ரி, பூசன், உஷா, சோமா, அஸ்வின் (2 பேர்), மாருத், எட்டு திசைகள், 12 ஆதித்யர்கள், வசிஷ்டா, ப்ரஹஸ்பதி, யமன், மன்யு, புருஷா,சரஸ்வதி, .. இப்படி செல்கிறது. இதில் எங்கேயும் விநாயகர் இல்லை.
அதற்காக பிள்ளையார் வேதங்களில் எங்கேயும் இல்லை என்று நான் சொல்லவில்லை. இருக்கிறார். ஆனால் தெய்வங்களைப் பற்றி குறிப்பிடும் ரிக் வேதத்தில் இல்லை.
வேறெங்கு இருக்கிறார் என்று அடுத்து பார்க்கலாம்.
அருமை ஐயா
ReplyDelete